(எம்.மனோசித்ரா)
தமிழ் மற்றும் சிங்களம் என்பன அரச மொழிகளாகும். எனவே அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இவ்விரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை.
இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டும் அரச மொழிகளாகும் என்றார்.
இதே வேளை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்த்தன, அலி சப்ரி , விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM