(எம்.வை.எம்.சியாம்)
காங்கேசன்துறையிலிருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட மூவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் மஹவ ரயில் நிலையத்தில் மீள பயணத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது குறித்த தரப்பினர்களுக்கு இடையில் ஆசனத்தை பெற்று கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது மதுபோதையில் இருந்த மூவர் ரயிலுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதோடு மற்றும் அங்கிருந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.
ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் மூவரும் மற்றும் இவர்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 22, 26, 28 மற்றும் 57 வயதுடையவர்கள் எனவும் மஹவ மற்றும் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM