பித்தப்பையில் கற்கள் இருந்தால் உடனே அதனை அகற்றிவிட வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்பு ஏற் படுமோ அத்தகைய பாதிப்பை இது உருவாக்காது என்றாலும், இதனை அலட்சியப்படுத்தினால் மஞ்சள் காமாலை வரக்கூடும். எனவே பித்தப் பையில் கல் இருந்தால் உடனே அதனை பரிசோதித்துக் கொண்டு, அதற்குரிய சிகிச்சைகளை மேற் கொள்ள வேண்டும்.
பித்தப்பை கற்கள், பித்தப்பையில் எங்கு செல்கிறதோ அந்த பகுதியில் அடைப்பை உருவாக்கும். அங்கிருந் துக் கொண்டு நோய் தொற்றை உருவாக்கும். பித்தப்பையிலிருந்து பித்த நீர் வெளியேறும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்குமேயானால், நோயாளிக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
அதே சமயத்தில் கற்களின் பக்கவாட்டு மற்றும் நுண்ணிய இடங்களில் எல்லாம் தீமை தரும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். இதனால் பித்த நாளங்களில் திரும்ப திரும்ப நோய் தொற்று ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். இதனை மருத்துவத்துறையினர் ரெக்கண்ட் கோலான்ஜைடீஸ் என்று குறிப்பிடுவார்கள். இதற்கு தனியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
பித்தக்கற்களால் ஏற்பட்ட அடைப் பால் பித்த நீர் பித்த நாளங்கள் வழியாகச் சென்று குருதியில் கலக்க முடியாமல் போகிறது. இது தொடருமேயானால் அவர்களுக்கு அபஸ்ட்ரக்டிவ் டைப் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும். இவை தானாக சரியாகாது. மருந்துகளாலும் கட்டுப்படுத்த இயலாது. இதற்கு கார ணமான பித்தக்கற்களால் ஏற்பட்ட அடைப்பை முழுவதுமாக நீக்க வேண்டும். அப்போது தான் குண மாகும்.
வேறு சிலருக்கு பித்தக் குழாயி லிருந்து பித்தநீர் சிறுகுடலுடன் சேருமிடத்தில் பெரிய அளவிலான பித்தக் கற்கள் உருவாகி அடைப்பு ஏற்பட்டிருக்கும். இதற்கு கால் ஸ்டோன் இலியஸ் என்று மருத்துவத் துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இதற்கும் மருந்து மற்றும் மாத்திரைகளால் கட்டுப்படுத்த இயலாது. பித்தக்கற்களின் அடைப்பை முழுவதுமாக சத்திர சிகிச்சை செய்து அகற்றினால் தான் குணமாகும். இதே போல் வேறு சிலருக்கு பித்த நாளங்களிலும், ஈரலி லும், சிறுகுடலிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதனை உரிய காலத்தில் பரிசோதித்து சிகிச்சைகள் மேற்கொள்ளவேண்டும்.
மேலும் சிலருக்கு மட்டும் பித்தப்பையின் சுவரில் பாலிப் எனப்படும் குடல் நீட்சிகளின் வளர்ச்சி அதிகமாக காணப்படும். இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடவேண்டும். ஏனெனில் இந்த நீட்சியானது வளர்ந்து புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உண்டு.
பித்தப்பையின் சுவர் முழுவதிலும் ஒரு மெல்லிய கால்சியம் படிந்த மடிப்பு உருவாகும். இதை மருத்துவத் துறையினர் போர்ஸிலியன் கால் பிளேடர் (Porcelain Gallbladder) என்று குறிப்பிடுவார்கள். இந்த மடிப்பு உரு வாகியிருப்பது பரிசோதனையின் போது உறுதியானால் உடனே பித்தப்பையை நீக்கிவிடவேண்டும். இல்லையெனில் இது புற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்து அதிகம் உண்டு.
ஒரு சிலருக்கு புற்று நோயாக மாறவில்லையெனில் தீவிரமான நோய் தொற்று ஏற்பட்டு அபாய கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உண்டு.
இந்த மாதிரியான தருணங்களில் மருத்துவர்கள் பித்தப்பையை அகற்றி விடுமாறு பரிந்துரைப்பார்கள். ஏன் வலியுறுத்தக்கூட செய்வார்கள். ஆனால் எமக்கு பித்தப்பையை அகற்றி விட்டால் செரிமானம் நடை பெறுவதில் ஏதேனும் பின்விளைவு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுவோம். இந்த பயம் தேவை யற்றது.
ஏனெனில் செரிமானத்திற்கு உதவும் பித்த நீரை கல்லீரல் தான் சுரக்கிறது. சுரக்கும் பித்த நீரை 30 சி சி முதல் 40 சிசி வரை தான் பித்தப்பை சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக 30 சி சி முதல் 40 சி சி வரை சேமிக்கப்படும் பித்தப்பையை நீக்குவதால் ஜீரண மண்டலத்திற்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படபோவதில்லை. இது பல முறை ஆய்வுகள் மூலம் நிரூ பிக்கப்பட்டுள்ளது.
இயல்பாக விரிந்து சுருங்க முடியாத பித்தப் பையில் தான் பித்தக் கற்கள் தோன்றுகின்றன. அதனால் சரியாக பணியாற்றாத நிலையில் இருக்கும் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக் கவே சுரக்காது. வேலை செய்யாத பழுதுபட்ட பித்தப்பையினால் ஜீரணத்திற்கு எந்த பயனும் இல்லை. அதினால் எதிர்மறையான பாதிப்பு தான் அதிகம். இதனால் பித்தப்பையை வைத்துக்கொள்வதை விட சத்திர சிகிச்சை மூலம் அகற்றிவிடுவதே சிறந்தது.
டாக்டர். ராஜ்குமார் M.S.,
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM