அவுஸ்திரேலியாவில தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று இலங்கையிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகொன்று வருகின்றது என்ற செய்தியை வெளியிடுமாறு அப்போதைய பிரதமர் ஸ்கொட்மொறிசன் தன்னை கேட்டுக்கொண்டார் என்பதை முன்னாள் உள்துறை அமைச்சர் கரன் அன்ருஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து படகொன்று வருகின்றது என அறிவிக்குமாறு முன்னாள் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் உத்தரவிட்டார் என முன்னாள் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தன்னை தொடர்புகொண்ட பிரதமர் படகு வருகின்றது என்ற அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார் எதிர்கட்சிகளிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார் என முன்னாள் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தன்னை உள்துறை அமைச்சராகவும் நியமித்துள்ளார் என்பது தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ள கரன் அன்ரூஸ்தான் பொதுவான அரசியல் நோக்கமற்ற பாதுகாப்பான இறைமை எல்லை நடவடிக்கைக்கு தான் ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளார்.
படகு குறித்த செய்தியை வாக்களர்கள் மத்தியில் வெளியிடுவது குறித்து பிரதமர் அலுவலகம் ஆராய்ந்தது குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேண்டுகோள் விடுத்ததும் படகு வருகின்றது என்ற அறிக்கையை 15 நிமிடங்களிற்குள் தயாரிக்குமாறு உள்துறை அமைச்சு உத்தரவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கொட் மொறிசன் ஐந்து அமைச்சரவை பதவிகளை இரகசியமாக வகித்தார் என்ற தகவல் பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையிலேயே தேர்தல் வெற்றிக்காக அவர் இலங்கை குடியேற்றவாசிகளின் படகுகளை பயன்படுத்த முயன்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிரதமர் செயற்பட்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது அவர் நாடாளுமன்றத்திலிருந்து பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடு;துள்;ளேன் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM