யுவான் வாங் 5 கப்பல் போன்றதொரு கப்பல் ஏற்கனவே 2014 இல் இலங்கைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள சீன தூதுவர் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்த கேள்விகளிற்கான பதில்களை இந்தியாவிடம் தான் கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
யுவான்வாங் 5 கப்பலின் வருகை நிகழ்வின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி?கப்பல் தாமதமானதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன?
பதில்- எல்லோருக்கும் தெரியும் நான் பணிவுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை.
கேள்வி- இந்தியா பாதுகாப்பு கரிசனைகளை வெளியிட்டுள்ளதே?
பதில்- நீங்கள் இந்த கேள்விகளை இந்திய நண்பர்களிடம் கேட்கவேண்டும் எனநான் கருதுகின்றேன்.
இந்த விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வெற்றிகரமாகவும் அமைதியாகவும் வந்தடைந்துள்ளது.
இது எங்கள் இரு நாடுகளிற்கு இடையில் வழமையான பரிமாற்றங்கள் என நான் கருதுகின்றேன்.
சீனாவும் இலங்கையும் நீண்ட கால நட்புறவை கொண்டுள்ளன.
சீனா ஆராய்ச்சி கப்பல் அம்பாந்தோட்டை விஜயம் மிகவும் இயல்பானது சாதாரணமானது.
இதில் விசேடமாக எதுவுமில்லை எல்லோருக்கும் இது தெரியும்.
இவ்வாறான கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இது முதல் தடவையல்ல,2014 இல் இவ்வாறானதொரு சீன கப்பல் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டது.
ஆகவே இது இயல்பான விடயம்,ஆகவே எங்களது ஊடக நண்பர்கள் இந்த நோக்கத்தின் விஜயம் குறித்து இலங்கை மக்களிற்கும் முழு உலகிற்கும் தெரிவிக்கவேண்டும்.
இந்த கப்பலின் விஜயம் குறித்து கடந்த சில இராஜதந்திர சிக்கல்கள் காணப்பட்டன,கப்பலிற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
பதில் - எனக்கு தெரியாது இதுவே வாழ்க்கையாகயிருக்கலாம் இதுவே இயல்பான விடயம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM