பறந்துகொண்டிருந்த விமானத்தில் வைத்து தனது ஆடைகளை களைந்துகொண்ட யுவதி ஒருவர், விமானியின் அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் ஜெட்2 நிறுவன விமானத்தில் இடம்பெற்றுள்ளது. தான் ஒரு பயங்கரவாதி எனக் கூறிக்கொண்டார்.
சைப்பிரஸின் லானேர்க்கா நகரிலிருந்து இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.
தனது மேலாடைகளை கழற்றிவிட்டு உள்ளாடைகளுடன் மாத்திரம் காணப்பட்ட இந்த யுவதி, சத்தமிட்டவாறு விமானியின் அறைக்குள் நுழையவதற்கு அவர் முயற்சி செய்தார்.
விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை வெடிக்கப்போவதாகவும் கூறினார்.
தான் ஒரு பயங்கரவாதி எனவும் தனது பெற்றோர் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் எனவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ்விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், அந்த யுவதியை மடக்கிப் பிடித்தார்.
பிலிப் ஓ பிறையன் எனும் 35 வயதான நபர் ஒருவர் தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட 6 பேர் கொண்ட குடும்பத்தினருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்.
பதின்ம வயதில் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் பணியாற்றியவர் பிலிப்.
அந்த யுவதியை ஏன் ஒருவரும் மடக்கிப் பிடிக்கவில்லை என விமான ஊழியர்களிடம் அவர் கேட்டார்.
தம்மால் முடியவில்லi என ஊழியர்கள் பதிலளித்தனர்.
அப்போது 'என்னால் அது முடியும்' எனக்கூறிவிட்டு அந்த யுவதியை பிலிப் மடக்கிப் பிடித்தார்.
பின்னர் அவ்விமானம் பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு திசை திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதையடுத்து குறித்த யுவதியை விமானத்திலிருந்து பொலிஸார் வெளியேற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM