அமெரிக்க நகரமொன்றின் பொலிஸ் நிலைய இணையத்தளத்தை முன்னாள் ஊழியர் ஒருவர் முடக்கியுள்ளார். சம்பளப் பிரச்சினையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நியூட்டன் நகர பொலிஸ் நிலைய இணையத்தளமே இவ்வாறு முடக்கப்பட்டது.
அந்நகரின் மேயர் ருதானே புவெல்லர் இது தொடர்பாக கூறுகையில், இப்பொலிஸ் பிரிவின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளராக பணியாற்றிய ஒருவரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி பொலிஸ் இணையத்தளத்துக்குச் செல்பவர்கள் நகர மேயருடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தும் தகவல் ஒன்று அந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது,
2 மாதங்கள் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டிருந்த நிலையில், அதை இயக்குவதற்கான அதிகாரம் நியூட்டன் பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கவில்லை.
அதனால், வேறு ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் மேற்படி ஊழியர் விலகுவதாக அறிவித்திருந்தார். அவ்வேளையில் தனக்கு 137,000 டொலர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளதாக கருதிய அவர், இணையத்தளத்தை முடக்கியிருந்தார் என மேயர் ருதானே புவெல்லர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM