அதிக மழையுடனான காலநிலையின் காரணமாக நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில் அதிலிருந்து சுமார் 18 அடி நீளமான முதலை ஒன்று மாத்தறை வெலேகொட பிரதேசத்தில் கரையேறியுள்ளது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளுள் இதுவே மிகப்பெரிய முதலையாகும் என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரையேறியுள்ள இந்த முதலையை பிரதேசவாசிகள் மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் பலத்த முயற்சியை மேற்கொண்டு பிடித்தனர். இம்முதலைக்கு மூன்று கால்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் பிறக்கும் போதே இந்த முதலை மூன்று கால்களுடனேயே பிறந்துள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பலத்த சிரமத்துக்கு மத்தியில் பிடிக்கப்பட்ட முதலையை மாத்தறை பொலிஸ் அதிகாரிகள், மிரிஸ்ஸ வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் கலமெடிய வனஜீவராசிகள் அதிகாரிகள் ஆகியோர் உயிருடன் மீண்டும் நில்வளா கங்கையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM