நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் இந்தியாவின் பெங்களூரு நகரில் இடம்பெற்றுள்ளது.
விவாகரத்துக் கோரிக்கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்திருந்த நிலையில். இத்தாக்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சித்ரா எனும் இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிவகுமாரும் அவரின் மனைவின் சித்ராவும் 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர்கள். விவாகரத்து செய்வதற்கு இவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை உளவள ஆலோசனை சேவை நிகழ்வொன்றில் பங்குபற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.இதன்படி, பெங்களூரு ஹோலேநரசிபுர குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு மணித்தியால ஆலோசனை நிகழ்வில் இத்தம்பதியர் பங்குபற்றினர்.
இதன்போது இவர்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை களைந்துவிட்டு இணைந்து வாழ்வற்கு இவர்கள் சம்மதித்தனர்.
எனினும், இந்நிகழ்வின் பின் வெளியே வந்த சித்ரா, கழிவறை நோக்கி நடந்தபோது, பின்தொடர்ந்து சென்ற சிவகுமார், அப்பெண்ணை கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து சிவகுமார் தப்பியோட முயன்றபோதிலும், அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு இரத்தம் வெளியேறியிருந்ததால், சிகிச்சையின்போது சித்ரா உயிரிழந்தார். 'இந்நபர் எவ்வாறு கத்தியை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்தார், இது திட்டமிடப்பட்ட கொலையா என்பது குறித்தும் நாம் விசாரித்து வருகிறோம் என பொலிஸ் அதிகாரி ஹரிராம் ஷங்கர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM