6 புலம்பெயர் அமைப்புக்கள் 316 தனிநபர்களின் தடைநீக்கம் : வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு ; புதிய பட்டியல் படி 15 அமைப்புக்கள், 316 பேர் கறுப்புப் பட்டியலில்

Published By: Digital Desk 5

14 Aug, 2022 | 08:54 PM
image

(நா.தனுஜா)

 நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 6 புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 316 தனி நபர்கள் மீதான தடையை  பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

இந் நிலையில்  1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1992/ 25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த கறுப்புப் பட்டியலை திருத்தி 2022 ஆகஸ்ட் முதலாம் திகதியிடப்பட்ட 2291/02  ஆம் இலக்க  அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக 577 தனி நபர்களும் 18 அமைப்புக்களும்  ஐ. நா. சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.  எனினும்  அப்பட்டியலில் இருந்த 316 தனி நபர்கள் ( ஒரே பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளடங்களாக), ஆறு அமைப்புக்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்( ATC) , உலக தமிழர் பேரவை ( GTF),  உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு (WTCC),  தமிழ் ஈழ மக்கள் சம்மேளனம் (TEPA), கனேடிய தமிழர் காங்கிரஸ் (CTC), பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ஆகிய 6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையே தற்போது  நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் திருத்தப்ப்ட்ட பட்டியல் பிரகாரம்,  புதிதாக 55 நபர்களும், 3 அமைப்புக்களும்  தடை செய்யப்பட்டோர் குறித்தான கறுப்புப் பட்டியலில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தாருல் அதர்,  இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம், சேவ்த பேர்ள் ஆகிய அமைப்புக்களே தடைச் செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைப்புக்களாகும்.

இது தொடர்பில் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவினால் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கருத்தியலை பரப்பும் வகையில் செயற்பட்டுவந்த அவ்வியக்கத்தின் கட்டமைப்பையொத்த தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்டிணைவுக்குழு, உலகத்தமிழர் இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் உதவி நிதியம், தலைமைக்காரியாலயக்குழு, தேசிய தௌஹீத் ஜமா-அத், ஜமா அத்தே மில் அத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, தாருல் அதர் அல்லது ஜாமியுல் அதர் பள்ளிவாசல், தேசிய கனேடியத்தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள்  ஆகிய 15  அமைப்புக்களே  தர்போது தடைச் எய்யப்ப்ட்டுள்ள அமைப்புக்கள் பட்டியலில்  உள்ளடங்குகின்றன.

அதேபோன்று பெரும்பாலும் போரின்போதும் அதன் பின்னரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் குறிப்பாக உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் கடும்போக்கு சிந்தனைகளைக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பலரின் பெயர்கள் உள்ளடங்களாக  316 தனி நபர்களும்  தடைச் செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43