சுங்க அதிகாரிகளாக நாடகமாடி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
47 வயதான நதிஷா ரோஷினி, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியா சென்றுள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இலங்கையைச் சேர்ந்த 31 வயதானமுகமது நஜ்மின், மற்றும் 40 வயதான செல்லையா அரவிந்தன், ஆகிய இருவரும், குறித்த பெண்ணை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர்.
இதையடுத்து அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்ற நிலையில், சந்தேகமடைந்த குறித்த பெண், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்ததோடு பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்ததையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM