நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் வாரத்தில் 5 நாட்களும் வழமைபோன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து பாடசாலைகளிலும் காலை 7.30 மணிக்கு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை பெற்று கொடுக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பாடசாலை அதிபர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள் பெற்று கொடுப்பது தொடர்பாக மாகாண அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள் அதிபர்களுக்கு வழங்கப்படும்
எதிர்வரும் 3 மாதங்களில் பாடசாலை நேரங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.
மேலும் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் தவிர்ந்துக் கொள்வதோடு பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மேலும் மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM