சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சமீபத்தில் இந்தியா பற்றி தெரிவித்திருந்த கருத்துக்களில் உள்ள உள்ளாந்த விடயங்களை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மீது சில நாடுகள் அழுத்தங்களை முற்றிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது.
அறிக்கையில் இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த உள்ளார்ந்த விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அது தனது தீர்மானங்களை சுதந்திரமாக எடுக்கின்றது.
இதுவரை இந்திய இலங்கை உறவுகளை பொறுத்தவரை எங்களின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த வருடம் மாத்திரம் இந்தியா முன்னொருபோதும் இல்லாதவகையில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 3.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இந்தியாவும் இலங்கையின் ஜனநாயகம் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவாகவுள்ளது.
இந்திய சீன உறவுகளை பொறுத்தவரை பரஸ்பர மதிப்பு பரஸ்பர உணர்வுபூர்வமான தன்மை பரஸ்பர நலன்கள் ஆகிய உறவுகளை முன்னேற்றகரமானதாக்குவதற்கு அடிப்படையான வி;டயங்கள் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்திவந்துள்ளது.
எங்கள் பாதுகாப்பு கரிசனைகளை பொறுத்தவரை இது ஒவ்வொருநாட்டினதும் இறைமையை அடிப்படையாக கொண்ட உரிமை.
நாங்கள் எங்களின் நலன்களை அடிப்படையாகவைத்தே சிறந்த மதிப்பீடுகளை மேற்கொள்வோம்.
இது இயல்பாகவே எங்கள் பிராந்தியத்தில் காணப்படும் நிலைமைகளை குறிப்பாக எல்லையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் எடுக்கும்என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM