காலியில் பாடசாலை மாணவிகள் பலரை சமூக ஊடகங்கள் ஊடாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
காலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பல மாணவிகளை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பிரபல கோவிலை நடத்தி வரும் பூசாரி என்ற போர்வையில் வாட்ஸ் அப் மூலம் மாணவிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM