எக்னெலிகொட கொலை சந்தேகநபர்களை பார்வையிடுவதற்கு மஹிந்த சென்றது ஏன்?   

25 Dec, 2015 | 10:34 AM
image

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கொலைச் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி தாம் என்­பதை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உறு­திப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளா­ரென நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் செய­லாளர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

கொழும்பில் அமைந்­துள்ள நவ சம­ச­மாஜ கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ அண்­மையில் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குச் சென்று ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக கைதா­கி­யுள்ள 5 இரா­ணுவ வீரர்­களை சந்­தித்­துள்ளார்.

இவர்கள் இர­ாணுவப் புல­னாய்வு பிரிவில் கட­மை­யாற்­றி­ய­வர்கள் என்­ப­தோடு இவர் கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தற்­போது பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்ற நிலையில் கடந்த அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே இந்தக் கொலை இடம் பெற்­றுள்­ள­மை­யினால் கொலையின் பின்­பு­லத்தில் அர­சியல் கார­ணிகள் இருக்­கலாம் என்ற சந்­தே­கங்­களும் நில­வு­கின் ­றன.

இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி, அவர்கள் மீது அனு­தாபம் காட்டி அவர்­களை சென்று பார்­வை­யிட வேண்­டிய அவ­சியம் என்ன என்ற சந்­தேகம் எமக்கு தோன்­றி­யுள்­ளது.

எமது பார்­வையில் இந்தக் கொலையின் மிக முக்­கிய சூத்­தி­ர­தாரி மஹிந்த தான் என்­பதை அவரே நிரூ­பித்­துக்­கொண்­டுள்ளார் என்பது விளங்­கு­கின்­றது.

அவர் தாம் நாட்டை காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்கள் சிறை யில் வாடு­வ­தை­யிட்டு கவ­லை­ய­டை­வதால் அவர்­களை பார்­வை­யிட சென்றேன் என்ற பாணியில் பேசு கிறார். ஆனால் அவர் கள் மட்டும் எமது நாட்டை காப்­பாற்­றிய வீரர்கள் இல்லை என்­பதை அவர் கவ­னத்தில் கொள்ள வேண் டும்.

ஆயி­ரக்­க­ணக்­கி­லான இரா­ணுவ வீரர்கள் நாட்டில் நில­விய 30 வருட யுத்­தத்திற்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக போரா­டினர். அவர்­களை பார்­வை­யிட வேண்டும் என்ற கருணை உள்ளம் ஏன் மஹிந்­த­வுக்கு வர­வில்லை?

கைதா­கி­யுள்ள நால்­வ­ரு­டனும் உள்ள தொடர்­புதான் அவர்கள் மீது மஹிந்­த­வுக்கு கரு­ணையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த யுத்த வெற்­றியின் முக்­கிய புள்­ளி­களில் ஒருவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா. அவரை ஏன் மஹிந்த அர­சாங்கம் மோச­மான முறையில் சிறை­யி­ல­டைத்து அவரை வருத்­தி­யது? அவர் ஒரு யுத்த வெற்­றியின் முக்­கி­யஸ்தர் என்­பதும் மஹிந்­த­வுக்கு விளங்­க­வில்லை.

இவ்­வாறு செயற்­பட்­டதன் பின்பு தற்­போது இரா­ணு­வத்­தி­னரை பாது­காக்க வேண்டும் என்று பேசும் உரி­மையும் மஹிந்­த­­வுக்கு இல்லை.

அதனால் தற்­போது அவர் எக்­னெ­லி­கொட கொலை விவகாரத்தின் கைதிகளை சென்று பார்வையிட்டது மட்டுமல்லாது அவரின் ஆதரவு அணியும் குறித்த கைதி களை பார்வையிட செல்கின்றது. அதனால் தற்போது எக்னெலிகொட கொலைக்கு ஆணையிட்டவர் மஹிந்த தான் என்பதை அவரே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக் கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44