ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் : உத்தியோகபூர்வ காரின் சேதம் 191 மில்லியன் ரூபா

Published By: Digital Desk 4

12 Aug, 2022 | 07:07 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 191 மில்லியன் ரூபா என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு - 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் ( ஜூலை 9 சம்பவம் ) தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரித்து வரும் நிலையில், அது குறித்த வழக்கு நேற்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.  இதன்போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  ஹரிப்பிரியா ஜயசுந்தர  மேர்படி சேத பெறுமதியை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அதன் அருகே அமைந்துள்ள அவரது சகோதரரான சன்ன நளின் விக்கிரமசிங்கவின்  வீட்டுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வீட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் 14 மில்லியன் ரூபா எனவும்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கையை முன் வைத்து தெரிவித்துள்ளார்.

 அதன்படி இந்த விவகாரத்தில் இதுவரை 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் பிணையில் உள்ளனர். ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 4,6,7,8 ஆம் இலக்க சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை பதிவுகளை பெற்று அதனை குற்றப் பிரதேசத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள கைவிரல் ரேகைகளுடன் ஒப்பீடு செய்து பரிசோதனை செய்ய இதன்போது நீதிமன்றால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் காலம்  எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு வரவுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31