ஆபாசமான படங்களைப் பிடித்து தனக்கு அனுப்புவதற்கு சிறுமிகளை நிர்ப்பந்தித்தாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜோர்டான் க்ரொப்ட் எனும் 26 வயதான இந்த இளைஞன் சுமார் ஒரு டஸன் சிறுமிகளை நிர்ப்பந்தித்ததாக குற்றம்சுமத்தப்பப்பட்டது.
இதற்காக பல்வேறு சமூக வலைத்தளங்களில் 20 கணக்குகளை இவர் ஆரம்பித்திருந்தார் எனவும் 12 வயதான சிறுமிகளையும் இவர் தனது பாலியல் அடிமையாக இருப்பதற்கு முயற்சித்தார் எனவும் அதிகாரிகள் குற்றம்சுமத்தினர்.
ஒரு சமூகவலைத்தளத்தில் மாத்திரம் 5,000 இற்கு அதிகமானோரை இவர் தொடர்புகொண்டிருந்தார் எனவும், தான் கூறுவதன்படி செயற்படாவிட்டால், அவர்களின் படங்களை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களை பின்தொடர்பவர்களுக்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தினார் எனவும் லூவிஸ் கிறவுண் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
தன்னை பதின்ம வயது சிறுவனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்நபர், பின்னர் தனது உத்தரவுகளை பின்பற்றுவர் தான் கருதுபவர்களிடம் தனது உண்மையான வயதை தெரிவிப்பாராம்
கணினிப் பாதுகாப்புத் துறையில் தான் பட்டம் பெற்றுள்ளதாகவும், தன்னை அதிகாரிகள் அடையாளம் காண முடியாது எனவும் தான் இலக்கு வைத்தவர்களிடம் ஜோர்டான் க்ரொப்ட் கூறியுள்ளார்.
பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகரகத்தின் (என்.சி.ஏ) சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி மார்ட்டின் லுட்லோக் இது தொடர்பாக கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இதயம் நொறுக்கும் துன்பங்களை ஜோர்டான் க்ரொப்ட் ஏற்படுத்தியுள்ளார் என்றார்.
“ஜோர்டான் க்ரொப்ட்டின் செயற்பாடுகளை நிறுத்துமாறு மன்றாடிய சிறுமிகளுக்கும் அவர் கருணை காட்டவில்லை.
அவருக்கு எதிராக துணிச்சலுடன் பேச முன்வந்த இளம் பெண்களை நான் பாராட்டுகிறேன்.
சிறார்களை துஷ்பிரயோகப்படுத்துவதற்கு இணையத்தில் அநாமதேயமாக ஒளிந்துகொள்ள முடியும் என நம்புபவர்கள் உட்பட பாரதூரமான குற்றவாளிகளை தேசிய குற்றவியல் முகவரகம் தொடர்ந்தும் பின்தொடரும்.
க்ரொப்ட் போன்றவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் மார்ட்டின் லுட்லோக் கூறினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர் பில் 2019 ஆம் அண்டு ஜோர்டான் க்ரொட் கைது செய்யப்பட்டிருந்தார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அனுப் பியிருந்த ஆபாசமான படங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவருக்கான தண்டனை எதிர்வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM