தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. கேரள மாநில திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும் நேபாளமும் மோதியிருந்தன. இந்தப்போட்டியில் இலங்கை 1-–0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடிக்கொண்டது.
இந்நிலையில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மாலை 6.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கருத்து தெரிவிக்கையில், நேபாளத்துடனான போட்டியில் எமக்கு சிறந்த பலன் கிடைத்திருக்கிறது. அதேபோல் எமது வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர். எமது தடுப்பாட்டம் மிகவும் சிறந்ததாக அமைந்தது. இன்றைய போட்டியில் நாம் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். இந்திய அணிக்கு
நிகராக எமது அணியும் செயற்படும் என்றார்.
இதேவேளை இன்றைய போட்டி
யில் இலங்கை எதிர்கொள்ளவிருக் கும் இந்தியா தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப்பில் 6 முறை சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM