அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், மருத்துவரான தனது மனைவி பல தடவைகள் தனது பழச்சாற்றில் நஞ்சு கலந்து தன்னை கொல்ல முயன்றதாக முறைப்பாடு செய்துள்ளார்.
கலிபோர்னியாவில் வசிக்கும் ஜெக் சன் எனும் 53 வயது நபர் என்பவர், தனது மனைவியான மருத்துவர் எமிலி யு (45) என்பவருக்கு எதிராக இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
இவர்கள் சுமார் ஒரு தசாப்தகாலமாக இணைந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தனது மனைவி 3 தடவைகள் தனது பழச்சாற்றில் நஞ்சு கலந்தார் என ஜெக் சன் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தான் நோய்வாய்ப்பட்டபோது, சமையலறையில் கண்காணிப்புக் கெமரா ஒன்றை பொருத்துவதற்குத் தான் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின் ஜூலை 11, 18 ஆம் திகதிகளிலும் தனது மனைவி தனது பழச்சாற்றில் நஞ்சு கலந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இக்கெமரா மூலம் பிடிக்கப்பட்ட படங்களையும் அவர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இம்முறைப்பாடு தொடர்பாக எமிலி யு பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 30,000 டொலர் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமது இரு பிள்ளைகளை தனது மனைவியும் மனைவியின் தாயும் துன்புறுத்துவதாகவும் ஜெக் சன் முறைப்பாடு செய்தார்.
அவரின் வேண்டுகோளின் பேரில், மேற்படி இரு பெண்களும் குறித்த பிள்ளைகளிடமிருந்து 100 யார் (91 மீற்றர்) தூரம் விலகியிருக்க வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM