காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களில் ஒருவரான அநுருத்த பண்டார தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை புதிய பரிமாணத்திற் கொண்டு செல்லும் நோக்குடன், 2022 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியதுடன் அதுபற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்தில் மேலும் பலம் பொருந்தியதாக முழு இலங்கையர்களையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அநுருத்த பண்டாரவின் டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM