அமெரிக்கப் பிராந்திய கல்வி வலயமொன்றிலுள்ள பாடசாலைக் கட்டடங்களில் ஏஆர்-15 ரக துப்பாக்கிகளைப் பொருத்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பாடசாலைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட கரோலினா மாநிலத்தின் மெடிசன் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்ஸாஸ் மாநிலத்தின் உவால்டே நகரிலுள்ள பாடசாலையொன்றில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 19 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்தவுடன் பொலிஸ் அதிகாரிகள் தாமதமாக செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்கா முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பது குறித்து ஆராய்ந்த மெடிசன் பிராந்திய அதிகாரிகள் ஒவ்வொரு பாடசாலையின் கட்டடத்திலும் ஏ.ஆர்15 ரக துப்பாக்கிளொன்றை பொருத்தவதற்கு தீர்மானித்துள்ளனர்.
பாடசாலை அதிகாரிகளும் மெடிசன் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலை வளவாளர் உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM