சீன கப்பலிற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்துள்ளமைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை சீனாவின் சமூக ஊடகமொன்று இடைநிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் இலங்கை குறித்த ஊக்குவிப்பு பிரச்சாரமொன்றை டுயினில் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் அதனை முன்னெடுக்க முடியாது என இலங்கை அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுவான் வாங் 5 கப்பலிற்கு அனுமதியளி;க்க மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சமூக ஊடகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் சமூக ஊடகங்களில் இலங்கைக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சீனாவின் சில பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM