கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட ஸ்டொனிக்கிளிப் தகரமலை தோட்டத்தில் ஒன்பது வீடுகளைக் கொண்ட லயன்பகுதியை சூழ நில வெடிப்பு உருவாகியுள்ளமையால், அங்கு வசித்து வரும் குடும்பங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் அந்த மக்களை அங்கிருந்து அகற்றி தற்காலிகமாகவேனும் வேறு இடத்தில் தங்க வைப்பதற்கான எந்த முயற்சிகளையும் தோட்ட நிர்வாகமோ அல்லது பிரதேச அரசியல் பிரமுகர்களோ முன்னெடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவ்விடத்துக்கு சென்ற மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் நிலைமைகளை பார்வையிட்டதோடு உடனடியாக இந்த மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்து தங்க வைக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
மேலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பியிடமும் இது குறித்து அறிவித்துள்ளார்.
குறித்த நில வெடிப்பு இடம்பெற்றுள்ள பகுதியில் கற்பாறைகள் காணப்படுவதாகவும் ஏற்கனவே சில குடியிருப்புகளில் மண்சரிவு ஏற்பட்டு அவை அகற்றப்படாமலிருப்பதாகவும் தெரிவித்த புஷ்பா விஸ்வநாதன் இது குறித்து அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கும் இப்பகுதியிலுள்ள அரசியல் பிரமுர்கள் கண்டு கொள்ளாமலிருப்பது வேதனையாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM