பிறந்த குழந்தையை  குளிப்பாட்டுவது எப்படி?

Published By: Digital Desk 7

09 Aug, 2022 | 02:38 PM
image

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி பார்ப்போம்.

* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மா, பயத்த மா போன்றவற்றை பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.

* குளிப்பாட்டும்போது குழந்தையை உலுக்கவோ குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.

* வாரம் 2 முறை தலைக்கு குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷெம்பு, சீகைக்காய் போன்றவற்றை பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷெம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும். 

* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.

* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின்  ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டிவிட்டால் சுலபமாக இருக்கும்.

* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்