கேள்வி:
எனக்கு வயது 39. எனது கணவருக்கு 42. திருமணமாகி பதினேழு ஆண்டுகள் ஆகின்றன. எமக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணாக இந்தக் கேள்வியை கேட்க விரும்பவில்லை. ஆனால், தவிப்புடன் இருக்கும் ஒரு மனைவியாக இந்தக் கேள்வியை இங்கு கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அண்மையில் நான் கண்ட அதிர்ச்சி சம்பவம்தான் என்னை இந்தக் கேள்வியை கேட்கத் தூண்டியது. எனக்கு 39 வயதென்றாலும் அழகுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால், எனது கணவர் இப்போதெல்லாம் என்னை நாடுவதேயில்லை. எனது கணவரும் ஏதோ மனச்சிக்கலில் இருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், சில நாட்களுக்கு முன் அவர் தனிமையில் சுகம் அனுபவிப்பதை பார்த்துவிட்டேன். அப்படியானால், அவருக்கு உறவில் நாட்டமில்லாமல் இல்லை. ஆனால், என்னுடன் உறவுகொள்ள விரும்புகிறாரில்லை. இது ஏன்? நான் என்ன குறை வைத்தேன்? அவரை மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
கோபித்துக்கொள்ளாதீர்கள்!
உலக அழகியே மனைவியாக வாய்த்தாலும் காலப்போக்கில் ஆண்களுக்கு - அறுதிப் பெரும்பான்மையான ஆண்களுக்கு சலித்துவிடும். வேறு பக்கம் பார்க்கவோ சரியவோ ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் எம்மாத்திரம்?
அனேக ஆண்களின் கண்களுக்கு தூரத்துப் பச்சை குளிர்ச்சியாகவே தெரியும். சில நாட்கள்தான்! பிறகு அதுவும் சலித்துவிடும். வாய்ப்புக் கிடைக்கும் வரையில் ராமனாக இருக்கும் ஆண்களே அதிகம்.
உங்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, திருமணமாகி பதினேழு ஆண்டுகளும் ஆகிவிட்டன. இந்த நிலையில் உங்கள் கணவருக்கு நீங்கள் அலுத்துப் போயிருப்பதில் ஆச்சரியமில்லை.
'இது என்ன ஆணாதிக்கம் மிக்க பதிலாக இருக்கிறது?' என்று நினைத்துவிடாதீர்கள். இதுதான் நடைமுறை உண்மை. இதற்கு ஆண்களின் மனம் மட்டும் காரணமல்ல. அவர்களது அமைப்பே 'படைப்பே' அப்படித்தான்!
உங்களை பொறுத்தவரையில் ஒரேயொரு ஆறுதல் என்ன தெரியுமா? அவர் உங்களை விட்டுவிட்டு வேறொருவரை தேடாமல், உங்களுக்கு உண்மையாகவும் அதேசமயம் தனது சந்தோஷம் கெடாமலும் பார்த்துக்கொள்கிறாரே, அதுதான்!
'நானும் பெண்தானே? எனக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்?' என்று கேட்பீர்கள் என்றால், அதற்கான தீர்வு உங்கள் கைவசம்தான் இருக்கிறது. ஏற்கனவே பல பெண்களுக்கு அளிக்கப்பட்ட பதில்தான். நீங்கள் இருவரும் தனிமையில் அதுவும் எந்தவித வேலையும் இல்லாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டால், ஒருவேளை உங்கள் கணவருக்கு உங்கள் அழகு கண்ணில் தெரிய வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற சூழலை ஏற்படுத்தவேண்டியது நீங்கள்தான்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM