( எம்.எப்.எம்.பஸீர்)
அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இன்று ( 8) நிராகரித்தார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால், பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார்.
நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 106 ( 3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கறுவாத்தோட்டம் பொலிஸார், சத்தியக் கடதாசி ஒன்றினையும் இணைத்து கோரிக்கை முன் வைத்திருந்தனர். அதனையே நீதிவான் நிராகரித்தார்.
அத்தோடு இன்று ( 8) ஆசிரியர் சங்கத்தினர் இணைந்து கொழும்பு நகர மண்டப பகுதியில் நடாத்திய, அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினையும் தடை செய்யுமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் கோரியிருந்த போதும் அதனையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM