(நா.தனுஜா)
இலங்கையில் வாழும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு அடுத்த 6 மாதகாலத்திற்கு அவசியமான உயிர்காக்கும் சுகாதாரசேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் கிளை செயற்திட்டங்களுள் ஒன்றான ஐக்கிய நாடுகள் பாலின மற்றும் இனவிருத்தி சுகாதார நிதியம் கோரிக்கைவிடுத்துள்ளது.
சுதந்திரமடைந்ததன் பின்னர் தற்போது இலங்கை மிகமோசமான சமூக - பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.
அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மின்விநியோகத்தடை ஆகியவற்றின் விளைவாக நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பும் சுகாதாரசேவை வழங்கலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது பெண்களின் கர்ப்பகால நலன் உள்ளடங்கலாக பாலின மற்றும் கர்ப்பிணிப்பெண்களுக்கான சேவை வழங்கலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், தற்போதைய பொருளாதார நெருக்கடியானது பெண்களின் சுகாதாரம், உரிமைகள் மற்றும் கௌவரம் ஆகியவற்றில் மிகையான பாதிப்புக்களைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரித்திருக்கின்றது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் யுவதிகளின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதும் அவர்களுக்கு சுகாதாரசேவை வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கிடைப்பனவை உறுதிசெய்வதுமே தமது முன்னுரிமைக்குரிய விடயமாகக் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நட்டாலியா கனேம் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தற்போது விடுக்கப்பட்டிருக்கும் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை கோரிக்கையின் ஊடாக 1.2 மில்லியன் பேருக்கு அவசியமான உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும், பெண்கள் மற்றும் யுவதிகளுக்குத் தேவையான 10,000 கர்ப்பகால உடைகளை வழங்குவதற்கும், அவசியமான சுகாதாரவசதிகளைப் பெறுவதற்கென 37,000 பெண்களுக்கு காசோலைகளை வழங்குவதற்கும், 4000 பெண்களுக்குத் தேவையான மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவசியமான தகவல்கள் மற்றும் அறிவூட்டல் கருத்தரங்குகளை நடாத்துவதற்கும் அவர்களுக்குரிய சுகாதாரசேவை வழங்கலின் இயலுமையை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM