இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் - சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Published By: Rajeeban

08 Aug, 2022 | 05:06 PM
image

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் சீனா கப்பலிற்கான எதிர்ப்பு அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன கப்பலின் இலங்கை விஜயம் இந்தியாவின் எதிர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு போக்குவரத்து தளம் சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்கள் உட்பட பல கப்பல்கள் விநியோகத்திற்காக இலங்கை துறைமுகங்களில் தரித்து நின்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் ஆழமான கடல்பகுதிகளில் கடல்பயணத்திற்கான சுதந்திரத்தை பயன்படுத்தியுள்ளது மேலும் கடலோர நாடுகளின் அதிகார வரம்பிற்குள் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான எல்லையை முழுமையாக மதிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இறைமையுள்ள நாடு தனது அபிவிருத்தி நலன்களை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டினால் ஏனைய உலக நாடுகளுடன் உறவுகளை  ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சீனா இலங்கை ஒத்துழைப்பு  என்பதை இரு நாடுகளும் சுதந்திரமாக தெரிவு செய்கின்றன அவை மூன்றாம் நாட்டை இலக்குவைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகளை முன்வைப்பது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமற்ற நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவைநேரடியாக சுட்டிக்காட்டாமல் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22