(இராஜதுரை ஹஷான்)
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதாக ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை.சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு முதலில் பகிரங்கமாக அறிவிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வக்கட்சி அரசாங்கத்தில் நான் இணைந்துக்கொள்வதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ள நிலையில் இடைக்காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது பொருத்தமானதாக அமையும் என்ற யோசனையை நாங்களே முதலில் முன்வைத்தோம்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பிலான யோசனையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி முன்வைத்தோம்.இருப்பினும் அவர் அது குறி;த்து அவதானம் செலுத்தாமலிருந்தது கவலைக்குரியது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 12 யோசனைகளை உள்ளடக்கிய திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த மாதம் 28ஆம் திகதி முன்வைத்தோம்.இந்த விடயங்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்மோம்.
சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM