சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதாயின் நாட்டு மக்களுக்கு முதலில் பகிரங்கமாக அறிவிப்போம் - விமல் வீரவன்ச

Published By: Digital Desk 5

07 Aug, 2022 | 04:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதாக ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை.சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு முதலில் பகிரங்கமாக அறிவிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வக்கட்சி அரசாங்கத்தில் நான் இணைந்துக்கொள்வதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ள நிலையில் இடைக்காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது பொருத்தமானதாக அமையும் என்ற யோசனையை நாங்களே முதலில் முன்வைத்தோம்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பிலான யோசனையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி முன்வைத்தோம்.இருப்பினும் அவர் அது குறி;த்து அவதானம் செலுத்தாமலிருந்தது கவலைக்குரியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 12 யோசனைகளை உள்ளடக்கிய திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த மாதம் 28ஆம் திகதி முன்வைத்தோம்.இந்த விடயங்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்மோம்.

சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01