(நா.தனுஜா)
இலங்கையில் வாழும் பின்தங்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள் முகங்கொடுத்திருக்கும் உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணைசார் நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நோர்வே அரசாங்கம் சுமார் 490 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
உலக உணவுத்திட்டம், யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆகிய அரச சார்பற்ற சர்வதேசக்கட்டமைப்புக்களின் இலங்கைக்கிளையிடம் வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவியின் மூலம் பின்தங்கிய சிறுவர்கள் மற்றும் பெண்களின் உணவு, போசணைத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
'தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் உணவு மற்றும் போசணை நெருக்கடி தொடர்பில் நான் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றேன்.
அங்கு நிலவும் பாரிய மனிதாபிமான நெருக்கடியானது பெண்கள் மற்றும் சிறுவர்கள்மீது மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது' என்று நோர்வே வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அனிகென் ஹுய்ற்பெல்ற் கரிசனை வெளியிட்டுள்ளார்.
'நோர்வே அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 490 மில்லியன் ரூபா நிதியின் மூலம் இலங்கையின் உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணை நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM