வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:24 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பேலியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெலியகொட, ஹொரனை சந்தியில் வைத்து  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய நாகமுவ, ரணல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் சந்தேகநபரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவிஸ்ஸாவெல்ல

அவிஸ்ஸாவெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு கலடுவாவ பிரதேசத்தில் சீதாவக்கபுர குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது மூன்று தோட்டாக்கள் உள்ளடங்களாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று (05) அவிஸ்ஸாவெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதோடு 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11