கேள்வி
40 வயதுப் பெண் நான். மணமான நாள் முதல் என் மாமியார் என்னுடன் நன்றாகத்தான் பழகி வந்தார். இப்போது அடிக்கடி அவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் ஒரு வேலை கூட செய்ய மாட்டார். அப்படியே செய்தாலும் அரைகுறைதான். அவர் சமைத்தால் அடுப்பை கூட சுத்தம் செய்து வைக்க மாட்டார். நான் இரண்டு நாட்கள் வெளியே போய்விட்டு வந்தால் வீடு வீடாக இருக்காது. அவரிடம் ஏன் இந்த மாற்றம்?
பதில்
மாற்றம் அவரிடமா, உங்களிடமா? இருவருக்கும் சண்டை வருகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் கடிதம் முழுவதுமே உங்கள் மாமியார் பற்றிய புகாராகத்தானே இருக்கிறது?
உங்களுக்கே நாற்பது வயதாகிறது. உங்களது மாமியார் ஒரு வேலையும் செய்வதில்லை என்கிறீர்களே? குறைந்தது அறுபது, எழுபது வயதுகளில் இருக்கும் ஒரு பெண் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?
மாமியாரையும் உங்கள் தாயாக பார்த்தீர்கள் என்றால், இந்தப் பிரச்சினை ஒரே நாளில் தீரும். முயற்சி செய்து பாருங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM