13 வயதான மாணவனுடன் வகுப்பறையில் பாலியல் உறவு கொண்ட அமெரிக்கப் பாடசாலை ஆசிரியை ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆசிரியைக்கு அண்மையில் குழந்தை பிறந்தமையே இதற்கான காரணம்.
32 வயதான மார்கா பொட்லைன் எனும் யுவதி, டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியறாறிய வந்தவர்.
இவர் மேற்படி பாடசாலையின் மாணவனுடன் வைத்து பாலியல் உறவு கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டது.
அம்மாணவன் 13 வயது சிறுவனாக இருந்தபோது ஆசிரியை இத் துஷ்பிரயோகம் ஆரம்பித்ததாகவும், 3 வருடகாலம் இது தொடர்ந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பாடசாலை வகுப்பறையிலும் ஆசிரியை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் மேற்படிமாணவன் தெரிவித்திருந்தான். மேற்படி மாணவனுக்கு தற்போது 16 வயதாகுகிறது.
மேற்படி ஆசிரியை விவாகரத்து செய்த பின்னர், அம்மாணவன் வசித்த குடியிருப்புத் தொகுதியில் மார்கா பொட்லைன் குடியேறியிருந்தார்.
முன்னாள் மாணவன் ஒருவன் தன்னை தொந்தரவுபடுத்துவதாக பாடசாலை அதிபரிடம் ஆசிரியை மார்கா பொட்லைன் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் பின்னர் மேற்படி விடயம் அம்பலமாகியிருந்தது.
மார்கா பொட்லைன் மற்றும் மாணவனின் தொலைபேசிகளை அதிகாரிகள் ஆராய்ந்தபோது, ஆபாசமான தகவல்கள், படங்கள் பரிமாறப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
தகாத வகையிலான படங்கள், வீடியோக்களை தான் மேற்படி மாணவனுக்கு அனுப்பியதாகவும், அம்மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் மார்கா பொட்லைன் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு அதிகபட்சமாக ஆயுட்காலத் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் 20 வருட சிறைத்தண்டனை விதிக்ககப்பட வேண்டும் என வழக்குத்தொடுநர்கள் கோரினர்.
எனினும் அவர் 60 நாட்கள் மாத்திரம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அண்மையில் அவர் குழந்தை யொன்றை பிரசவித்ததால் 2023 ஜூன் 5 ஆம் திகதிவரை சிறைக்குச் செல்லத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்படி குழந்தைக்கு குறித்த மாணவன் தந்தை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM