இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு நவசமசமாஜக்கட்சி தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ன கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்த நாட்டின் தொழிலாளர்களின் அதிக மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகம் பெற்ற ஒரு தலைவரை எழுந்தமானமாக கைது செய்தமையை இந்த நாட்டின் இடதுசாரி சக்திகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இனவாதத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வந்த ஒருவராகவும், ராஜபக்ச குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர உறுதியுடன் போராடிய தொழிலாளர் வர்க்க தலைவரை கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக விடுதலை செய்யுமாறு வேண்டிகொள்கிறோம் என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM