இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் சபையால் எனக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதனை நான் நிராகரித்துள்ளேன்.
காரணம் நான் கடந்த 11 மாதங்களான நாட்டுக்கா ஒரு போட்டியில் கூட பங்குபற்றவில்லை. நான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அது ஏனைய ஒரு வீரருக்கு செய்யும் அநீதியாகும்.
தற்போதைய நிலையில் நான் அணிக்காக விளையாடக்கூடிய தகுதியில் இல்லையென கருதுகின்றேன். அதனால்தான் குறித்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளேன். எதிர்காலத்தில் அணிக்காக விளையாடக்கூடிய தகுதி ஏற்படுமானால் அடுத்த ஒப்பந்தத்தில் என்னால் இணைந்துக்கொள்ள முடியும், அதற்கான தீர்மானத்தை கிரிக்கெட் சபையுடன் இணைந்து மேற்கொள்ள தயாராகவுள்ளேன் .
குறித்த விடயத்தினை கிரிக்கெட் சபையிடம் தெளிவுப்படுத்தியுள்ளேன்.
எனது இந்த கோரிக்கையை கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளுமென நான் நம்புகின்றேன். எனக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையில் எந்தவித தகராறுகளும் இல்லை. எனக்கு ஒப்பந்தம் வழங்கியமைக்கு கிரிக்கெட் சபைக்கு எனது நன்றிகள்.
இதேவேளை எனக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ஒரு இளம் வீரருக்கு கிரிக்கெட் சபை வழங்கும் பட்சத்தில் அது அணியை சக்திமிக்கதாக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM