கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், கல்கிசை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ, வழக்கு ஒன்றிற்காக ஆஜராகியிருந்த சாட்சி ஒருவரை இலக்கு வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நீதிமன்ற அறைக்குள் இருந்த மக்கள் குழுவில் சந்தேக நபர் இருந்ததாகவும், சாட்சி பெட்டியை நெருங்கி சாட்சியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சந்தேக நபரால் குறித்த சாட்சி நபரை காயப்படுத்த முடியாததால் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறி, வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அச்சுறுத்தும் சைகையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்த அவர் குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த சாட்சி நபருக்கு ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM