டீசல் , பெற்றோல் கப்பல்களுக்கு முற்பணம் செலுத்தப்பட்டது : விமான எரிபொருளுக்கு ஒப்பந்தமும் கைச்சாத்து - காஞ்சன

Published By: Vishnu

03 Aug, 2022 | 02:59 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவும் ,  அது தவிர மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்கொடுப்பனவும் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

'நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலிலுள்ள டீசல் தொகையை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்காக ஓராண்டு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தின் கீழான முதற்கட்ட விமான எரிபொருள் எதிர்வரும் 12 - 14 ஆம் திகதிக்கு இடையில் நாட்டை வந்தடையும்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை கியூ.ஆர். முறைமை தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்ச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,

'தேசிய எரிபொருள் அனுமதி அட்டை கியு.ஆர். முறைமையுடன் அரசாங்க வாகனங்களை பதிவு செய்வதற்காக , பொதுவான பதிவு முறைமையைப் பயன்படுத்தி அவ் வாகன சாரதியின் அல்லது வாகனத்தைப் பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் , கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவிலக்கத்துடன் ஒரு வாகனத்திற்கு ஒரு கையடக்க தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து சகல நிறுவனங்களுக்கும் தமது வியாபார பதிவு இலக்கம் அல்லது வழங்கப்படும் விசேட அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு விசேட தொலைபேசி இலக்கத்துடன் அவ் அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான சகல வாகனங்களையும் பதிவு செய்வதற்கான அனுமதி உரித்தாகும்.

அதன் பின்னர் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக கியூஆர். பதிவினை நீக்க முடியும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38