அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஹிலாரி கிளின்டன் இராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய போது தனது உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை மேற்படி தேர்தலில் அவருக்கு பாதகமான பெறுபேற்றைத் தரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் புலனாய்வுப் பணிமனை (எப்.பி.ஐ) தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அவரை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு விசாரணை குறித்து அறிவிக்கப்பட்டவுடன் ஹிலாரிக்கான ஆதரவில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்த போதும் அவர் டொனால்ட் டிரம்பை விடவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன் நிலையில் இருந்து வந்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி மின்னஞ்சல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்துஅவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை அவருக்கு இந்தத் தேர்தலில் பெரும் அனுகூலத்தை அளிப்பதாக உள்ளதாக கருதப்படுகிறது.
அதேசமயம் கடும்போக்கு அமெரிக்கர்கள் மத்தியில் அபிமானம் பெற்றவராக திகழும் டொனால்ட் டிரம்போ தனது சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் பெண்கள் தொடர்பான கீழ்த்தரமான விமர்சனங்களாலும் சராசரி அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் ஒருவராகவுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 219 மில்லியன் அமெரிக்கர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்கெடுப்புகளானது மாநிலங்களுக்கிடையிலான நேர வித்தியாசத்தின் பிரகாரம் 6 நேர வலயங்களில் இடம்பெறுகிறது. தேர்தல் நடைபெறும் நேரம் மாநிலங்களுக்கிடையே வித்தியாசப்படினும் அநேக மாநிலங்களில் உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணியிலிருந்து இரவு 7:00 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அமெரிக்க வாக்காளர்கள் ஒவ்வொரு மாநிலத்திலுமிருந்து ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்காளர் தொகுதி உறுப்பினர்களை தெரிவு செய்வர். தொடர்ந்து வாக்காளர் தொகுதியினூடாக புதிய ஜனாதிபதியும் உப ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படுவர்.
முதலாவது தேர்தல் பெறுபேறுகள் கிழக்கு மாநிலங்களிலிருந்து வெளிவரும்.
போட்டி வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்காளர் தொகுதி வாக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் யார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை தேர்தலுக்கு மறுநாளான நாளை புதன்கிழமையே கூறக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலிலான வெற்றியை உறுதிசெய்ய வேட்பாளர் 538 தேர்தல் தொகுதிகளில் 270 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற வேண்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் பிரதான போட்டியாளர்கள் இருவரும் 269 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்றிருப்பின் போட்டி இறுக்கமாகவிருக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் தேர்தல் முடிவு தாமதமாகும். இதன்போது ஒவ்வொரு வாக்கும் தனித்தனியே எண்ணப்படும். அத்துடன் தேர்தல் செயற்கிரமங்கள் தொடர்பான சட்ட சவால்களும் தேர்தல் பெறுபேறுகளைத் தாமதப்படுத்தும்.
அமெரிக்கத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் தொகுதி உறுப்பினர்களின் வாக்கெடுப்பு எதி்ர்வரும் டிசம்பர்மாதம் நடைபெற்று அதன் பெறுபேறுகள் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜனவரி 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM