அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை இன்று புதன்கிழமை தாய்பேயில் சந்தித்தார்.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றடைந்தார். அவருக்கு தாய்வான் இராணுவம் பாதுகாப்பு அளித்துள்ளது.
கடந்த 1949 இல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தாய்வானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தாய்வான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சீன ஜனாதிபதி ஜிங்பிங்,
நான்சி பெலோசி தாய்வான் வருகையை அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுவோர், சாம்பலாகிப் போவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தை துவக்கி முதற்கட்டமாக சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேசினார்.
நேற்று இரவு நான்சி பெலோசி தாய்வானை சென்றடைந்தார்.
அவரை தாய்வான் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர். தாய்வானின் தாய்பேயை சென்றடைந்த பெலோசிக்கு தாய்வான் இராணுவ பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்நிலையில், நான்சி பெலோசி, தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை தாய்பேயில் சந்தித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM