( எம்.எப்.எம்.பஸீர்)
காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய பெண் ஒருவர் தொடர்பில், வீசா விதிமுறைகளை மீறினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மருத்துவ வதிவிட வீஸா அனுமதியின் கீழ் கடந்த 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் நீர் கொழும்பு மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தங்கியிருப்பதாக கூறப்படும் ' தெரபிஸ்ட்' ஒருவர் தொடர்பிலேயே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த பெண் kayzfra5er எனும் தனது இன்ஸ்டர்கிராம் பக்கம் ஊடாகவும் முகப்புத்தக பக்கம் ஊடாகவும் போராட்ட நிலப்பரப்பில் வீடியோ காட்சிகளை பதிவிட்டு, போராட்டக்க்காரர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் கெடுபிடிகளை கொடுப்பதாக உணர்வு பூர்வமான விடயங்களை சித்திரித்து வெளிநாடுகளில் உள்ளவர்களையும் போராட்டத்துக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையிக்லேயே உளவுத் துறையின் அறிக்கைகளை மையப்படுத்தி பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்களம் , குறித்த பெண், வீசா நடைமுறைகளை மீறியுள்ளாரா என்பது தொடர்பிலும், இதன் பின்னர் அவருக்கு வதிவிட வீஸாவை நீடிப்பதா என்பது குறித்தும் இந்த விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM