(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்தினால் வழங்கப்படும் கியூ.ஆர்.குறியீடு முறை மூலம் விநியோகிப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை என்று அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் கருத்து தெரிவிக்கையில்,,
முச்சக்கர வண்டிகளுக்கு கிடைக்கபெறும் 5 லீட்டர் எரிபொருள் போதுமானதாக இல்லை. அதனை கொண்டு வாரத்திற்கு அல்ல. ஒரு நாளைக்கு மாத்திரம் கூட பயன்படுத்த போதுமானதாக இருக்காது.
தற்போது நாடளாவிய ரீதியில் 11 மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கியூ.ஆர். முறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சுமார் 7.5 மில்லியன் முச்சக்கர வண்டி சாரதிகள் முச்சக்கரவண்டியை செலுத்துவதை தொழிலாக செய்து வருகின்றனர்.
11 மில்லியன் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதில் முச்சக்கர வண்டி செலுத்துவதை தொழிலாக கொண்டுள்ள 7.5 மில்லியன் முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கு மாத்திரம எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் சாதாரணமாக வாரம் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.
முச்சக்கர வண்டி தொழில் செய்பவர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் சாலையில் அலைந்து தொழில் புரிகின்றனர். ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 1 லீற்றலில் 6 கிலோ மீட்டர்கள் மாத்திரமே ஓடும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM