ஏ.பி
இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வரும்மந்தபோசாக்கினை எதிர்கொள்வதற்கான அவசர உதவியை இலங்கை கோரியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக பத்தில்ஒருவர் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கும் நிலை உருவாகிவரும் நிலையிலேயே இலங்கை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
போதிய உணவின்றி அவலத்தில் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களிற்கு உணவளிப்பதற்காக தனியாரிடமிருந்து உதவியை கோருவதாக மகளிர் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வங்குரோந்து நிலையில் உள்ள அரசாங்கம் நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று உச்சத்தில் காணப்பட்டவேளை நிலைமை மோசமாகயிருந்தது தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகமோசமானதாக மாறியுள்ளது என அமைச்சின் செயலாளர் நெய்ல் பண்டார ஹப்புகின்னே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2021 இல் ஐந்து வயதிற்கு உட்பட்ட 570.000 சிறுவர்கள் மத்தியில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்ட 127,000 சிறுவர்கள் இருப்பதை மதிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பணவீக்கத்தின் முழுமையான தாக்கம் மற்றும்உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களிற்கான பற்றாக்குறை காரணமாக இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து நேரடி உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இரண்டுமடங்காகியுள்ளது சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அரசாங்கத்தையே உணவிற்காக நம்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM