முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே குறித்த முறைகேடு இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், கியூ. ஆர் பரிசோதனை இன்றி மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொள்கலன்களிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் வினவியபோது,
நேற்று 31 ஆம் திகதி வரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாடு முழுவதும் கியூ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் எமது ஆளணியை நிறுத்திக்கொண்டோம்.
இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைக்குட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM