(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள பொதுஜன பெரமுனவை தவிர்த்து எந்த அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க முடியாது. சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக இருக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் முதலாம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்கும் போது வெளிநாட்டுகையிருப்பு 7 பில்லியன் டொலராக காணப்பட்ட போதும், பாவிக்க கூடிய வெளிநாட்டு கையிருப்புகுறைந்தப்பட்ச அளவில் காணப்பட்டது. கொவிட் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடிதொடர்ந்து தீவிரமடைந்தது.
கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் நாட்டை மூடுமாறு பல்வேறுதரப்பினர் தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்ததால் பொருளாதார நெருக்கடி மேலும்தீவிரமடைந்தது. பொது காரணிகளை அடிப்படையாக கொண்டு அரசியல் சூழ்ச்சிகளினால் பாரியதொருஅரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் உட்பட பலர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சித்தார்கள். கடன் பெறாமல் நாட்டை முன்னேற்றும் செயற்திட்டங்களை முன்னெடுத்தோம். இருப்பினும் அதற்கு அரசாங்கத்திற்குள் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் இடமளிக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றில் பிரதான அரசியல் கட்சியாக உள்ளது. பொதுஜன பெரமுனவின் பங்களிப்பில்லாமல் எந்த அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க முடியாது. சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக அமையும் பட்சத்தில் ஆளும் கட்சிக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்து ஆதரவு வழங்குவார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM