(எம்.வை.எம்.சியாம்)
தங்கல்ல பிரதேசத்தில் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கலையில் இருந்து திஸ்ஸமகாராம நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் தங்கல்ல, ஹேனக்கடுவ பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கார் சாரதி மற்றும் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM