கார் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி ; மூவர் காயம்

Published By: Digital Desk 5

01 Aug, 2022 | 03:14 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தங்கல்ல பிரதேசத்தில் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்  இளைஞர்கள்  இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கலையில் இருந்து திஸ்ஸமகாராம நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் தங்கல்ல, ஹேனக்கடுவ பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.  உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கார் சாரதி மற்றும் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06