கடற்கரைக்குச் செல்லும்போது தமது உடல் தோற்றம் குறித்து கவலையடையும் பெண்களுக்காக விசேட பிரச்சாரத் திட்டமொன்றை ஸ்பானிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வட அரைகோள நாடுகளில் தற்போது கோடைக்காலம் நிலவுகின்றது. கோடைக்காலத்தில் கடற்கரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வழக்கம்.
இந்நிலையில், கடற்கரைக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து செல்லும்போது தமது உடல் தோற்றம் குறித்து பல பெண்கள் கவலையடையக்கூடும் என்பதுதால், மேற்படி பிரச்சாரத் திட்டத்தை ஸ்பானிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அனைத்துப் பெண்களின் உடல்களும் கடற்கரைக்கு ஏற்ற உடல்களே என்ற தொனிப்பொருளில் இப்பிரசாரம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பான சுவரொட்டிகளையும் ஸ்பானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பருமனான உடற்தோற்றம் கொண்ட பெண்கள், சத்திரசிகிச்சையால் மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண் ஆகியோரும் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
இப்பிரசாரத்துக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள அதேவேளை, சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
பல்வேறு தோற்றங்கள் கொண்ட ஆண்களையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த சுவரொட்டி விஸ்தரிக்கப்படுமா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்பெய்னின் இடது சாரி தலைவர் காயோ லாரா இது தொடர்பாக கூறுகையில், இல்லாத பிரச்சினையொன்றை இப்பிரச்சாரம் உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM