யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற கொத்மலை கிண்ண 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் யாழ். பத்திரிசியார் அணியை எதிர்த்தாடிய மருதானை ஸாஹிரா அணி 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று கொத்மலை கிண்ணத்தை சுவீகரித்தது.
நான்கு குழுக்களில் 28 அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டியில் குழு சியில் இடம்பெற்ற ஸாஹிரா ஒரு போட்டியில்தானும் தோல்வி அடையாமல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இறுதிப் போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஸாஹிரா அணியினர் 30 ஆவது நிமிடத்தில் எம். ஷவ்ரான் மூலம் முதலாவது கோலைப் போட்டது.
இடைவேளையின் பின்னர் எம். சஹீல் 22 யார் தூர ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
80ஆவது நிமிடத்தில் மீண்டும் சஹீலின் ப்றீ கிக்கை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட எம். ஹம்மாத் தனது தலையால் பந்தை முட்டி ஸாஹிராவின் மூன்றாவது கோலைப் போட்டார்.
இறுதிப் போட்டி நாயகனாக எம். சஹீல் தெரிவானதுடன் சிறந்த கோல்காப்பாளராக ஸாஹிராவின் கலீல் உர் றஹ்மான் தெரிவானார்.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற போட்டியில் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் அணியை சந்தித்த கடந்த வருட சம்பியன் இளவாலை புனித ஹென்றியரசர் அணி 3 க்கு 0 என்ற கொல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பெற்றது.
புனித ஹென்றியரசர் சார்பாக எஸ். ரூபன்ராஜ் (22 நி.), ஜீ. அன்ரனிராஜ் (54 நி.), என். ஏ. ரமேஷ் (79 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM