கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு

Published By: Vishnu

31 Jul, 2022 | 07:25 PM
image

(அட்டன் கிளை)

நுவரெலியா  மாவட்டத்தின் பல நகரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. தோலுரித்த புரொய்லர் ரக கோழி இறைச்சி ஒரு கிலோ 1400 ரூபாவிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றது.

சிவப்பு முட்டை 50 ரூபாவுக்கும் வெள்ளை முட்டை 49 ரூபாவுக்கும் விற்கப்பட்டு வருகின்றன.

கோழி தீனியின் விலைகள் அதிகரித்த காரணத்தினாலும் மேலும் எரிபொருட்கள் விலை அதிகரிப்பால் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளமை காரணமாக விலைகள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை சிறிய அளவு கோழி பண்ணைகளை நடத்தி வந்த பலரும் இம்மாவட்டத்தில் தமது தொழிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்ள போக்குவரத்து செலவுகள் மற்றும் கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பால் ஒரு கிலோ கோழியை தாம் 1800 ரூபாவுக்கு விற்றாலே நட்டத்திலிருந்து மீளலாம் என்று தெரிவிக்கின்றனர். 

இந்த விலைக்கு நுகர்வோருக்கு கோழி இறைச்சியை விற்க முடியாத காரணங்களில் தாம் இத்தொழிலை நிறுத்தி வைத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40