அவுஸ்திரேலிய மருத்துவமனைகள் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் பெரும் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோ மரணங்களின் எண்ணிக்கை 12,000நெருங்குகின்றது.
அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமானதாக காணப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் இதன் காரணமாக கொவிட்டினால் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11832 ஆக அதிகரித்துள்ளது. 24000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களி;ல் அரைவாசிப்பேரே இனங்காணப்பட்டுள்ளனர் என கருதுவதாக தெரிவித்துள்ள விக்டோரியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரெட் சட்டன் தனது மாநிலம் உச்சநிலையை தொட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் விக்டோரியாவில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பின்னர் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எங்களை சுற்றியுள்ளவர்கள் மருத்துவமனைகள் குறித்து சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் 12 இல் 1 கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளது எனினும் முன்னர் போல இல்லாமல் குறைந்தளவானவர்களே தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் மருத்துவமனைகள் அதிகளவு கொவிட் நோயாளர்களினால் கடும் சுமையை எதிர்கொள்கின்றன 5000 மருத்துவமனை கட்டில்களில் கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM