(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக மேற்கொண்டிருந்த ஹோட்டல் முன்பதிவுகளில் 45 சதவீதமானவை அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வந்திருந்த போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவியான தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்கள் சுற்றுலாத் துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மின்வெட்டு ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு ஏனைய முக்கிய காரணிகளாகும்.
இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இம்மாதத்தில் இதுவரை 42,925 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சாதாரணமாக, ஒரு வாரநாட்களில் சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 1533 ஆகும். இது வார இறுதி நாட்களில் சராசரி எண்ணிக்கை 1900 ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுவாக ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் காலமாகும். எனவே இக்காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கண்டி பெரஹராவை இலக்காகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்த்திற்காக எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவியான தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM